• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

ராதாபுரம் தொகுதியில் அப்பாவு 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஏன்?

Byadmin

Jun 5, 2026


DMK, Appavu, MLA, 2016, Case, Victory

பட மூலாதாரம், Appavu/X

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், தோல்வியடைந்ததாக கூறப்பட்ட முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெற்றி பெற்றார் என்றும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இன்பதுரை தோல்வியடைந்ததாகவும் 10 ஆண்டுகளுக்குப் பின்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பின்பு இந்த தீர்ப்பு வந்தாலும், இதில் தனக்கு நியாயம் கிடைத்திருப்பதால் வரவேற்கிறேன் என்று கூறிய அப்பாவு, இந்த தீர்ப்பு தேர்தல் தொடர்பான பல வழக்குகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்றார்.

அப்பாவுக்குக் கிடைத்த தபால் வாக்குகள் செல்லாது என்ற தனது வாதம் முக்கியமானது எனவும் அதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார் இன்பதுரை.

ராதாபுரம் தொகுதி வழக்கும், தற்போது வந்துள்ள தீர்ப்பும்!

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை உள்ளிட்ட பலரும் போட்டியிட்டனர். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அவருக்கு சான்று வழங்கியது.

ஆனால் தனக்குக் கிடைத்த தபால் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி, இன்பதுரை வெற்றியை எதிர்த்து அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தேதியன்று நீதிமன்ற வளாகத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வென்றதாகத் தெரியவந்தது.

By admin