• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

ரேசன் விநியோகத்தில் பெரிய மாற்றமா? மத்திய அரசின் வரைவு மசோதாவுக்கு முதல்வர் விஜய் எதிர்ப்பு ஏன்?

Byadmin

Jul 8, 2026


முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு, பொது விநியோகத் திட்டம்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகள் மூலம் (ரேசன் கடைகள்) வழங்கப்படும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆலோசித்து வருவதாக மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் என்றும் அதனால் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“சுமார் எழுபது லட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்குகந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று நம்புகிறேன்,” என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?

மத்திய அரசு கடந்த மாதம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டிருந்தது.

By admin