• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

வவுனியாவில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் சாவு!!

Byadmin

Sep 28, 2024


வவுனியா,  பூவரசங்குளம் – குருக்கல்புதுக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என்று பூவரசங்குளம்  பாெலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, குருக்கல்புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன்,  பயணித்த இளைஞரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்

இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வவுனியாவில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் சாவு!! appeared first on Vanakkam London.

By admin