• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

விஷக் காளான்களை சமைத்துக் கொடுத்து உறவினர்களை கொன்ற பெண் – மருத்துவரால் சிக்கியது எப்படி?

Byadmin

Jul 11, 2025


ஆஸ்திரேலியா, கொலை வழக்கு, காளான் கொலை, உணவு விஷம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரின் பேட்டர்சன்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எரின் பேட்டர்சன் என்கிற பெண்மனி தனது உறவினர்களின் உணவில் விஷக் காளான்களை வைத்துக் கொலை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலைகள் எவ்வாறு நடந்தன, மருத்துவர்கள் அதை எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் கிறிஸ் வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார். எரின் பேட்டர்சன் மருத்துவமனைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலே அவர்தான் குற்றவாளி என்பதை உணர்ந்துவிட்டார் மருத்துவர் கிறிஸ்.

அவர்தான் குற்றவாளி என்று தனக்கு நன்கு தெரிந்ததாகக் கூறும் அவர், “நான் சிறிது யோசித்தேன், பிறகு ‘ஆம், இவர்தான் செய்துள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தேன். அவர் ஒரு கொடூரமான நபர். அனைவருக்கும் விஷம் வைத்தது இவர்தான்” என பிபிசியிடம் தெரிவித்தார்.

அன்றைய தினம் எரின் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்து பரிமாறிய நான்கு பேரில் இருவருக்கு, மருத்துவர் கிறிஸ் சிகிச்சை அளித்து வந்தார். எரின் ஜூலை 2023இல் அவரது வீட்டில் மதிய உணவுக்கு வந்தவர்களுக்கு உணவில் விஷக் காளான்களைச் சேர்த்துப் பரிமாறியுள்ளார்.

By admin