எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தல்:
சவுதி குடிமை பாதுகாப்பு இயக்குநரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “எச்சரிக்கை: மெக்கா நகரில் ஆபத்து நீங்கிவிட்டது. உங்கள் பாதுகாப்பிற்காக, குடிமை பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுங்கள் மற்றும் ஒன்று கூடுவதையும் படம்பிடிப்பதையும் தவிர்க்கவும். அவசர காலத்தில், (911) என்ற எண்ணை அழைக்கவும்,” என்று கூறியுள்ளது.
சவுதி குடிமை பாதுகாப்பு படை முன்னதாக ஆறு பிராந்தியங்களில் குறுகிய கால வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. ஹவுதிக்கள் இந்த வாரம் சவுதி அரேபியா மீது பல ஆண்டுகளில் இல்லாத மிக கடுமையான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதில், எண்ணெய் தளங்கள் தீக்கிரையாகின மற்றும் 73 பேர் காயமடைந்தனர்.
திங்களன்று மேற்கு ஏமனில் ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலில் எட்டு அரசாங்க வீரர்கள் கொல்லப்பட்டதாக இரண்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள கமிஸ் முஷைத்தில் இருக்கும் கிங் காலித் விமானப்படை தளத்தின் மீது “டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப்” பயன்படுத்தி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.