இதேபோன்று முந்தைய சம்பவங்கள்:
புகை கண்டறியும் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செல்லும் மற்றொரு விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியன்று, வாரணாசியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்பக்க சரக்கு பகுதியில் புகை கண்டறியும் எச்சரிக்கை ஒலித்ததை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.
155 பயணிகளை ஏற்றிச் சென்ற IX1253 விமானம், அவசரகால மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.