• Tue. Oct 1st, 2024

24×7 Live News

Apdin News

ஹைதராபாத்: இறுதி ஊர்வலத்திற்கு பறை வாசிக்காத தலித் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமம்- நடந்தது என்ன?

Byadmin

Oct 1, 2024


ஹைதராபாத்: இறுதி ஊர்வலத்திற்கு பறை வாசிக்காத தலித் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமம் : உண்மையில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, பஞ்சமி சந்திரம்

தெலங்கானாவில் இறுதி ஊர்வலத்திற்கு பறை அடிக்காததால் ஒரு தலித் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் ‘மாதிகா’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்க கிராமப் பெரியவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

மேற்படிப்பு படித்து, தங்கள் விருப்பப்படி வேலை செய்யும் தலித் சமூக இளைஞர்களைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மட்டுமின்றி சக தலித் பிரிவினர் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin