• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

ஹைராக்ஸ்: ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியை தொடர்ந்த வீராங்கனை – என்ன நடந்தது?

Byadmin

Sep 19, 2026


 ஹைராக்ஸ் தடகள வீராங்கனை, ஜோனா வியட்ரிஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனதார மன்னிப்புக் கோரிய ஜோனா வியட்ரிஸ்க்

    • எழுதியவர், எல்லா கிப்ளிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஹைராக்ஸ் உடற்பயிற்சிப் போட்டியின் போது, ஆடையில் மலம் கழித்த நிலையிலும் தொடர்ந்துப் போட்டியிட்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோசன்னா வீட்ஸிக், இச்சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த உள்ளரங்க உடற்பயிற்சிப் போட்டியின் போது நடந்த இந்த சம்பவத்திற்குத் தனது “மனமார்ந்த மன்னிப்பை” தெரிவித்துள்ள ஜோசன்னா வீட்ஸிக், தான் “வேறு ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்றும், போட்டியிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆடை அழுக்கடைந்த பிறகும் ஜோசன்னா வீட்ஸிக் தொடர்ந்து போட்டியிட்ட காணொளி இணையத்தில் வெளியாகிப் பரவலான சுகாதார கவலைகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதத்திற்காக ‘ஹைராக்ஸ்’ அமைப்பின் இணை நிறுவனரான மோரிட்ஸ் ஃபர்ஸ்டே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

வியாழக்கிழமை வீட்ஸிக் வெளியிட்ட அறிக்கையில், “எனது நடவடிக்கை என்னையும் தாண்டிப் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தன் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, பெய்ஜிங் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை வீட்ஸிக், தனது வெற்றியைத் துறப்பதாக தெரிவித்துள்ளார்.

By admin