மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பிரசவம்
35 வயதான அந்தப் பெண் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் – ஒரு ஆண் குழந்தை என இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறப்புக்கு பின் மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன்,
ஆண் குழந்தையை பெற்ற அதே வேளை ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவி மீது ஆத்திரம் அடைந்துள்ளார்.
தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.