• Wed. Apr 15th, 2026

24×7 Live News

Apdin News

‘850 லோக்சபா உறுப்பினர்களா?’ – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?

Byadmin

Apr 15, 2026


தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், x/mkstalin

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதன்மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி நடப்பதாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அனைத்து மாநிலங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் நோக்கம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏஎன்ஐ செய்தி முகமை, லைவ் லா ஆகியவற்றின்படி, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு ஏப்ரல் 16ஆம் தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

By admin