6
புதுமுக கலைஞர் நடிகர் அஸ்வின் -விக்னேஷ் -ராஜேஷ்- யோகேஷ் -லட்சுமணன் -ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ முதற்கனல் ‘ திரைப்படம் – போதை பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு என்றும், இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆர். வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘முதற்கனல் ‘திரைப்படத்தில் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ் , லட்சுமணன் ,ஆதி ,அரிகிருஷ்ணன் ,ஹரி, பாலாஜி, ஆகாஷ் ,ஸ்ரீ ஜித், பிரதாப் ,தீபா பத்மநாபன் ,திருவேங்கட கிருஷ்ணன் , கருப்பசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கந்தசாமி கோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மீரா லால் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். போத்திராஜ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் போதைப்பொருளை பாவிப்பதால் இளைய தலைமுறையினரின் வாழ்வு சிதைக்கப்படுகிறது. அவர்கள் தங்களையே தொலைத்துவிடுகிறார்கள் இதனால் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த சிக்கல்களையும் , விளைவுகளையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை ” என்றார்.