பழக்கண்காட்சி
பழக்கண்காட்சியையொட்டி 30 வகைகளில் 130 ரகங்களில் 3 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த செடிகளில் தற்போது சால்வியா மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின், உட்பட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது.
அரியவகை மரங்களுக்கு அடியில் பூந்தொட்டிகளை கொண்டு அலங்கரிக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. இந்த கண்காட்சியில் 11 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை சார்பில் அரியவகை பழங்கள் மற்றும் உள்ளூர் பழத்தோட்ட விவசாயிகள் விளைவித்த பழங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.