• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

EPFO 3.0: முழு பி.எஃப் தொகையை யாரெல்லாம் எடுக்க முடியும்? – வரவுள்ள மாற்றங்கள்

Byadmin

Jun 19, 2026


இபிஎஃப்ஓ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்கான விதிகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, ‘இபிஎஃப்ஓ 3.0’ திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.

இதுவரை நடைமுறையில் இருந்த காகித ஆவணங்கள் சார்ந்த செயல்முறைகள் அதிக நேரத்தை எடுத்து வந்தன. ஆனால், இனி வரும் காலங்களில் பணத்தை எடுப்பது இன்னும் எளிதாக மாறும். யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் உங்கள் வருங்கால வைப்பு நிதித் தொகையை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றும் வகையில், இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களைச் செய்ய உள்ளது. இதன் மூலம் காகித ஆவணங்கள் சார்ந்த பணிகள் குறைவதோடு, மிகக் குறைந்த நேரத்தில் பணத்தைப் பெற முடியும்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இனி யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் உடனடியாகப் பணத்தை எடுக்க முடியும், இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பல உறுப்பினர்களிடையே, “தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? முழுமையாக 100 சதவிகிதத் தொகையை எடுக்க அனுமதி உள்ளதா?” என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

By admin