• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

IND vs IRE: வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்ப்பதில் தயக்கம் ஏன்? 4 முக்கிய விஷயங்கள்

Byadmin

Jun 29, 2026


இந்தியா - அயர்லாந்து, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது. நேற்று (ஜூன் 28) நடந்த 2வது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி.

பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா அடித்த பவுண்டரி, ஹேரி டெக்டர் வீசிய வைட்கள், நோ பால்கள் ஆகியவற்றின் வாயிலாக முதல் 4 பந்துகளில் 12 ரன்கள் கிடைத்தன. 2 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்ஷித் ராணா வெளியேறினார். அதனால், கடைசிப் பந்தில் பிரின்ஸ் யாதவ் சிக்ஸர் அடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடந்த முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது இந்தியா. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 0-2 என இழந்திருக்கிறது.

உலக சாம்பியனாக விளையாடிய முதல் தொடரில், புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடிய முதல் தொடரில் இப்படி எதிர்பாராத முடிவை சந்தித்திருக்கிறது இந்தியா.

By admin