இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் ஆன் சே யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய வீராங்கனை 21-17, 21-15 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.