எனினும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் முதல் இரண்டு ஐ.பி.எல். தொடர்களில் 350-க்கும் அதிக ரன்களை அடித்த இரண்டாவது அன்கேப்டு இந்திய வீரர் என்ற பெருமையை பிரியாஷ் ஆர்யா படைத்துள்ளார். கடந்த 2025 ஐ.பி.எல். தொடரில் இவர் 475 ரன்களை குவித்திருந்த நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் இதுவரை இவர் 357 ரன்களை குவித்துள்ளார்.
முன்னதாக 2010-ஆம் ஆண்டு அம்பத்தி ராயுடு 356 ரன்களும், 2011-ஆம் ஆண்டு 395 ரன்களும் குவித்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் வீரர் ஆனார். இதேபோல் பல ஐ.பி.எல். தொடர்களில் 400-க்கும் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் பிரப்சிம்ரன் சிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2025 ஐ.பி.எல். தொடரில் 549 ரன்களும், நடப்பு 2026 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 438 ரன்களும் குவித்துள்ளார்.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் (2018, 2019) காலக்கட்டத்திலும், அபிஷேக் சர்மா (2022 மற்றும் 2024) ஆண்டுகளில் 400-க்கும் அதிக ரன்களை குவித்தனர்.