இது குறித்து பேசிய அவர், “திரு. விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, அவர்களின் பிரமிக்க வைக்கும் தேர்தல் அறிமுகத்திற்காக நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்; எனவே, ஒரு நிலையான பெரும்பான்மையை அமைத்து, தமிழக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்குவதற்கான மக்கள் ஆணை (mandate) இப்போது அவர்கள் வசமே உள்ளது,” என்று அவர் கூறினார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. கட்சி 108 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 10 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ள நிலையில் த.வெ.க. கட்சி தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளில் இடம்பெற்றிருந்த சிறிய கட்சிகளின் ஆதரவை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.