• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

Kaveri Water காவிரி நீர் விவகாரம்: மேகதாது அணை, நீர் திறப்பு பிரச்சனையில் விஜய்-சிவக்குமார் சந்திப்பு திட்டம்

Byadmin

Aug 18, 2026


காவிரியில் அறிவித்தபடி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.

அதேபோல், காவிரி நீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் சந்தித்தால் என்ன மாதிரி பலன் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எம்.ஜி.ஆர். முதல்…

ஏற்கனவே, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி குண்டுராவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, 1997-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட் ஆலோசனையின்படி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பாட்டீலைச் சந்தித்துப் பேசினார். அதேபோல், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2012-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஸ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரியைச் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்காது என பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

By admin