எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான “சுதந்திரமும் வளங்களும்” இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.