• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு – என்ன நடக்கிறது? முழு விவரம்

Byadmin

Sep 8, 2026


சிங்கப்பூரில் இந்தியர்கள் மீது இனவெறிப் பேச்சு, நேபாள வெள்ளம், ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம், அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இயற்கை பேரிடருக்குப் பிறகு, எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் பாரபட்சம் அல்லது வெறுப்புணர்வு வளர்வதை அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டின் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளனர்.

நேபாள வெள்ளத்தில் 1,355 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் காணவில்லை.

காணாமல் போனவர்களில் சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவர்.

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர்.

By admin