• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

அனில் அம்பானி தொடர்புடைய கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Byadmin

May 30, 2026


இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூட்டமைப்பு வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கூடுதல் கடன்கள் மற்றும் பொது நிதியை திசைதிருப்பி முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் செயலில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சதிகாரர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிக்கு ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மற்றும் அனில் அம்பானிக்கு எதிராக எஸ்.பி.ஐ. அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. முன்னதாக RC0742025E0005 என்ற வழக்கை பதிவு செய்திருந்தது.

முதல் தகவல் அறிக்கையின்படி, எஸ்.பி.ஐ. தலைமையிலான 11 வங்கிகளின் கூட்டமைப்பு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூபாய் கால கடன்களை அனுமதித்திருந்தது. அதே சமயம், 17 பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ரூ. 19,694.33 கோடியாக இருந்தது.

By admin