• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை பற்றி இரானிய ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Apr 14, 2026


ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“போர்க்களத்தில் தோல்வியடைந்ததைப் போலவே அமெரிக்கா மீண்டும் தோல்வியடையும்” என்று கூறி, ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை இரானிய செய்தித்தாள்களும் சமூக ஊடக ஆய்வாளர்களும் கேலி செய்துள்ளனர்.

பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தன; இதற்கு இரான் பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 8-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டன. அந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இரான் தன்னை இந்த மோதலில் ஒரு வெற்றியாளராக முன்னிறுத்துகிறது.

ஏப்ரல் 12-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில், ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிட தொடங்கும் என அறிவித்தார். வேறு நாடுகளும் இதில் ஈடுபடும் என்று அவர் மேலும் கூறினார்.

By admin