• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

பீகார் முதல் மந்திரியாக சாம்ராட் சவுத்ரி தேர்வு

Byadmin

Apr 14, 2026


மாநிலங்களவை உறுப்பினராக பீகாரின் நிதிஷ்குமார் சில தினங்களுக்கு முன் பதவியேற்றார்.

இதற்கிடையே, இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியாக இருந்த சாம்ராட் சவுத்ரி சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பீகார் முதல் மந்திரியாக சாம்ராட் சவுத்ரி விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் முதல் முறையாக பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin