• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?

Byadmin

May 19, 2026


அமெரிக்கா, கௌதம் அதானி, சமரசத் திட்டம், வழக்கு முடித்து வைப்பு,

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிராக ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது.

இதன் மூலம், நியூயார்க்கில் நடைபெற்று வந்த பத்திரங்கள் மற்றும் பணப் பரிமாற்ற மோசடி வழக்கு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

ப்ளூம்பெர்க் செய்தியின்படி, அமெரிக்க கருவூலத் துறை சமரசத் திட்டத்தை அறிவித்த உடனேயே, கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற நீதித்துறை கோரியது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் வழக்கை முடிவுக்குக் கொண்டு வர கௌதம் அதானியும் சாகர் அதானியும் இணைந்து 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், அதானி குடும்பத்தினர் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது. அதன் குற்றச்சாட்டுகளின்படி, அதானி குடும்பத்தினர் இந்த முறையில் 750 மில்லியன் டாலரை திரட்டியுள்ளனர், இதில் அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 175 மில்லியன் டாலரும் அடங்கும்.

By admin