• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க கடற்படை தாக்குதலில் இந்திய மாலுமிகள் பலி – ஓமன் அருகே இந்த கப்பல்கள் குறிவைக்கப்பட்டது ஏன்?

Byadmin

Jun 11, 2026


திங்கள்கிழமை அன்று பலாவு நாட்டுக்கொடியுடன் சென்ற 'எம்டி மேரிவெக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலல்லாமல், புதன்கிழமை நடந்த தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டித்தது.

பட மூலாதாரம், @FSUIINDIA

படக்குறிப்பு, ஒரு எண்ணெய் கப்பலைத் தாக்கி செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓமன் கடற்கரைக்கு அப்பால் புதன்கிழமை அன்று, ‘செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவரை இன்னும் காணவில்லை.

ஃபார்வர்டு சீமென் யூனியன் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ் கூறுகையில், “உயிரிழந்தவர்கள் டெக் கேடட் ஆதித்யா சர்மா மற்றும் என்ஜின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்றார்.

தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷை இன்னும் காணவில்லை.

இந்திய அரசு இதற்கு முன்பு இவர்கள் மூன்று பேரையுமே காணவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது, ஆனால் அதன் அறிக்கையில் அமெரிக்காவின் பெயரை அது குறிப்பிடவில்லை.

By admin