• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்தியர்கள் – வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Jun 13, 2026


ஓமான் வளைகுடாவில் இதுவரை மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

பட மூலாதாரம், @CENTCOM

படக்குறிப்பு, ஓமான் வளைகுடாவில் இதுவரை மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இந்திய மாலுமிகள் குறித்து இந்தியாவில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது. மேலும், “இதுதான் அமெரிக்கா இந்தியாவின் மூலோபாய பங்காளியா?” என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளையும் விமர்சகர்களையும் திருப்திப்படுத்துவது மோதி அரசுக்கு எளிதானதல்ல. மறுபுறம், சர்வதேச ஊடகங்களிலும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஊடகமான சிஎன்என் தனது செய்தி ஒன்றில், “ஒரு வணிக எண்ணெய் விநியோகக் கப்பல் (டேங்கர்) மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது இந்தியாவில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று எழுதியுள்ளது.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான உறவுகளில் இது ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிஎன்என்- மூலோபாய பங்களிப்பில் தாக்கம் ஏற்படலாம்

சென்காம் ஜூன் 9 அன்று எம்டி செடபெல்லா கப்பல் மீதான தாக்குதலின் வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், CENTCOM

படக்குறிப்பு, சென்காம் ஜூன் 9 அன்று எம்டி செடபெல்லா கப்பல் மீதான தாக்குதலின் வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

சிஎன்என் செய்தியின்படி, “புதன்கிழமை அதிகாலை எம்டி செடபெல்லோ ஓமான் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் இரானிய எண்ணெயைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, ஒரு அமெரிக்க விமானம் அதன் எஞ்சின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பலில் தீப் பற்றியது, வானில் பெரும் புகைக் கூட்டங்கள் எழும்பின, மேலும் ஒரு பெரிய மீட்புப் பணி தொடங்கப்பட வேண்டியிருந்தது.”

By admin