• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

அறிமுகமில்லாத நபர்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்ட 50 பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்!

Byadmin

Jul 24, 2026


எச்சரிக்கை: இந்தச் செய்தியில் பாலியல் செயல்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

தங்கள் வாழ்க்கைத்துணைகளால் அறிமுகமில்லாத அந்நியர்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக 50 பெண்கள் பிபிசியிடம் (BBC) தெரிவித்துள்ளனர்.

‘ஸ்விங்கிங்’ எனப்படும் இணைகளைப் பரிமாறிக்கொள்ளும் பாலியல் முறையில் ஈடுபட விருப்பம் இல்லாதபோதும், தங்கள் துணையின் கோபத்திற்கு பயந்தோ அல்லது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவோ இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக இந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வேதனையான அனுபவங்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நீண்டகால மன அதிர்ச்சி குறித்துப் பேசியுள்ளனர்.

ஒரு பெண் தனது கணவர் தன்னை 90க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், ஒருமுறை அவர் தனது கணுக்காலைப் பிடித்துக் கீழே தள்ளியதாகவும் கூறினார்.

எமிலி என்ற பெண், தான் கர்ப்பமாக இருந்தபோதுகூட இத்தகைய பாலியல் கிளப்களுக்குச் செல்ல தனது கணவரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பெண், தனது கணவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்ததால், தன்னால் உதவி கோர முடியவில்லை என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இணையதளத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இந்தப் பாலியல் சந்திப்புகள் பெரும்பாலும் ‘FabSwingers’ என்ற இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தளத்தின் வழியாகச் சந்தித்த ஆண்களால் தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக ஆறு பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
16 பெண்கள் தங்கள் அனுமதியின்றி, அந்தரங்கப் புகைப்படங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தளம் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ், குறித்த’ இணையதளத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “ஸ்விங்கிங்” என்ற பெயரில் நடக்கும் இத்தகைய கட்டாயப் பாலியல் செயல்பாடுகளை, பாலியல் சுரண்டலாகக் கருதி பொலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்கள் குடும்ப வன்முறையின் ஒரு பகுதி என்பதை பொலிஸார் புரிந்துகொள்ள முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் குடும்ப வன்முறை ஆணையர் டேம் நிக்கோல் ஜேக்கப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிபிசியின் இந்த விசாரணைக்குப் பிறகு, பல பெண்கள் தங்களின் பல ஆண்டு கால ரகசிய துயரத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளனர்.

மூலம் : பிபிசி

By admin