• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய கோப்பையை மொஹ்சின் நக்வியிடம் பெற மறுத்த இந்திய மகளிர் அணி – பாகிஸ்தான் கூறியது என்ன?

Byadmin

Sep 14, 2026


மொஹ்சின் நக்வியிடம் கோப்பையைப் பெற மறுத்த இந்திய அணி - பாகிஸ்தான் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்ற முறையில் மொஹ்சின் நக்வி அங்கு இருந்தார்.

இந்தப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அணியினருடன் வெற்றியைக் கொண்டாடினார். ஆனால், அணியை எட்டாவது ஆசியக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத் கவுர், கோப்பையைப் பெறுவதற்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தச் சம்பவத்தை விளையாட்டில் உள்ள பண்பு தொடர்பான விவகாரமாக பாகிஸ்தான் குறிப்பிட்டது. விளையாட்டில் பண்பு இல்லையென்றால், வெற்றிக்கும் தோல்விக்கும் அர்த்தமில்லை என்று பாகிஸ்தான் கூறியது.

By admin