• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதி தடையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கவலை என்ன?

Byadmin

May 16, 2026


சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன்? இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புதன்கிழமையன்று, 2026 செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கரும்பு உற்பத்தி கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு, இரானில் நிலவும் போரினால் உர இறக்குமதியில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில், தனது மிகப்பெரிய மக்கள்தொகைக்குத் தேவையான உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை, ஏற்றுமதித் தடை குறித்த இந்த முடிவு உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியாவின் அதிக மதிப்புள்ள சர்க்கரை மீதான ஏற்றுமதித் தடை பல கேள்விகளை எழுப்புகிறது.

By admin