• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் சர்க்கரை விலை உயர எத்தனால் பயன்பாடு காரணமா? அச்சம் எழுவது ஏன்?

Byadmin

Aug 23, 2026


உயர்ந்து வரும் சர்க்கரை விலைகளுக்கு எத்தனாலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர்ந்து வரும் சர்க்கரை விலைகளுக்கு எத்தனாலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் சர்க்கரை விலை 20% உயர்ந்துள்ளது.

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஆகஸ்ட் 20 அன்று சில்லறை சந்தையில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.55.7 ஆக இருந்தது. அதே அறிக்கை, ஒரு மாதத்திற்கு முன்பு சர்க்கரை விலை கிலோ ரூ.48.18 ஆக இருந்ததாகவும், 2025 ஆகஸ்ட் 20 அன்று அதன் விலை கிலோ ரூ.46.3 ஆக இருந்ததாகவும் கூறுகிறது.

இதற்கு முன் சர்க்கரை விலை இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். எல் நினோ காரணமாக ஏற்பட்ட பலவீனமான பருவமழையும் சர்க்கரை விலையை பாதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மத்திய அரசின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு கிட்டத்தட்ட கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. ஐந்து ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் நான்கு லட்சம் ஹெக்டேர் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜன்மாஷ்டமியுடன் தொடங்கும் பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. அதிகரித்து வரும் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த, சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், மொத்த விற்பனை வர்த்தகர்கள் வைத்திருக்கக் கூடிய சர்க்கரையின் அளவுக்கும் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

By admin