0
வட – கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் பிரிவினைவாதச் செயற்பாடுகள் மற்றும் இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வியினை எழுப்பி, சர்வஜன அதிகாரம் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் பிரதானமாக மூன்று வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
