• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

இமயமலை – மேற்கு தொடர்ச்சி மலை இரண்டுக்கும் என்ன வேறுபாடு? பேரிடர் அபாயம் பற்றி வல்லுநர்கள் எச்சரிக்கை

Byadmin

Sep 19, 2026


இமயமலை - மேற்கு தொடர்ச்சி மலை வேறுபாடு என்ன? பேரிடர் அபாயம் பற்றி வல்லுநர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்குப் பின்பு, ஆற்றுப்படுகைகளில் உள்ள நகரங்கள், குடியிருப்புகளுக்கு உள்ள இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தல்கள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் போன்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இமயமலையில் பனி உருகி நதிகள் உற்பத்தியாவது போலல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளே நதிகளின் தோற்றுவாயாக இருப்பதால், இத்தகைய ஆற்றுப்படுகைகளில் இதுபோன்ற வெள்ள அபாய பாதிப்பு அதிகம் வரவாய்ப்பில்லை என்கின்றனர் புவியியலாளர்கள் மற்றும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள். அதேநேரத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு அபாயங்கள் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

அதனால் தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மாவட்டம் போன்ற மலைப்பகுதிகளில் சிறப்புச்சட்டங்களை உருவாக்கி, கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டுமென்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நேபாள பேரிடருக்கும் காலநிலை மாற்றத்துக்குமான தொடர்பு என்ன?

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கின்றனர். இந்த இயற்கைப் பேரிடருக்குப் பின்பு, மலைப் பகுதிகளுக்கான அச்சுறுத்தல்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. பேரிடருக்கான காரணங்களும் பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றன.

காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவற்றுக்கும், இந்த இயற்கைப் பேரிடருக்குமான தொடர்புகளை பல்வேறு புவியியல் ஆய்வாளர்களும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

By admin