• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

‘இரண்டு நாட்களாகியும் பதில் இல்லை’ – நேபாள வெள்ளத்தில் விடை தெரியாத 49 பேரின் நிலை? கலங்கும் குடும்பத்தினர்

Byadmin

Aug 29, 2026


சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் கொண்ட குழு
படக்குறிப்பு, சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் கொண்ட குழு

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

“பயணம் மேற்கொள்ள வேண்டாமெனப் பலமுறை கூறியும் அம்மா கேட்கவில்லை. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை” எனக் கூறி கலங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த பிரியங்கா.

“கடந்த இரண்டு நாட்களாக என் அக்கா, மாமா, மாமியார் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்கிறார் தேனியைச் சேர்ந்த கோபி.

இந்திய தூதரகத்தில் இருந்து உரிய பதில் வரும் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். வெள்ளப் பெருக்கில் காணாமல் போனவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.

By admin