• Wed. Apr 15th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர் முடிந்தாலும் எரிசக்தி நெருக்கடி ஏன் நீண்ட காலம் நீடிக்கும்? 6 காரணங்கள்

Byadmin

Apr 14, 2026


இரான் போர்

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி உண்மையில் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

தற்காலிகப் போர் நிறுத்தமோ அல்லது இரான் போரின் முடிவோ, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியையும் விலையையும் போருக்கு முந்தைய நிலைக்கு உடனடியாகக் கொண்டு வந்துவிடாது.

போருக்கு முந்தைய நிலை என்பது மலிவான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏராளமாகக் கிடைத்த காலத்தைக் குறிக்கிறது. அப்போது வணிகங்கள் செழித்து வளர்ந்தன, மக்களின் வருமானம் எவ்வளவு இருந்தாலும் அது உயர்ந்து கொண்டே இருந்தது.

இப்போது போருக்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வருவதைக் கடினமாக்கும் பல காரணங்கள் உள்ளன.

இரான் போர்

பட மூலாதாரம், AFP

1. இப்போதுதான் எண்ணெய் தட்டுப்பாடு தொடங்கியுள்ளது

பாரசீக வளைகுடாவிலிருந்து ஒரு டேங்கர் கப்பல் அதன் வாங்குபவர்களை அல்லது இறக்குமதி செய்பவர்களைச் சென்றடைய சராசரியாக ஒன்றரை மாதங்கள் ஆகும்.

By admin