• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

இளையராஜா பெரும் சந்தேகத்துடன் தொடங்கிய அன்னக்கிளி – பாடல்கள் ஹிட் ஆனதும் மாறிய திருப்பம் என்ன?

Byadmin

May 14, 2026


இளையராஜா, அன்னக்கிளி, இசை, கோலிவுட்

பட மூலாதாரம், ILAYARAJA/X

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“முதல்முறையாக ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வந்தபோது எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. பஞ்சு அருணாச்சலம் என்னிடம் ஏதாவது பாடல் இருக்கிறதா எனக்கேட்க, சில பாடல்களை பாடிக் காண்பித்தேன். நன்றாக உள்ளது, இதை வைத்தே நான் திரைக்கதை எழுதிக் கொள்கிறேன் என்றார் அவர். அந்தப் பாடல்களை வாத்தியங்கள் இல்லாமல் மேசையில் கைகளால் தட்டியே பாடிக் காண்பித்தேன்”.

‘அன்னக்கிளி’ திரைப்படம் உருவான விதம் குறித்து, 2024இல் ஒரு இசை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருந்தார் இளையராஜா.

இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’, 1976இல் வெளியானபோது, அதன் பாடல்கள் வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. காரணம் அதில் ஒலித்த புதுமையான கிராமத்து இசை.

அதற்கு முன், 1960கள் மற்றும் 70களில் கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேசன் என்பவரிடம் சில ஆண்டுகள் இசை உதவியாளராகப் பணிபுரிந்தார் இளையராஜா.

பெரும் தயக்கத்துடனே ‘அன்னக்கிளி’ திரைப்படத்திற்கு இசையமைத்ததையும், பாடல்கள் வெற்றியடைவது பெரும் சந்தேகம் தான் நினைத்ததையும் இளையராஜா பல முறை கூறியுள்ளார்.

By admin