2
மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரு கால்பந்து வீராங்கனைகள், தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
ஈரானிய தேசியக் கீதத்தைப் பாட மறுத்ததன் மூலம் பாத்திமா பசந்தீதே (Fatemeh Pasandideh – வயது 22) மற்றும் அதீபே ரம்சானிசாதே (Atefeh Ramezanisadeh – வயது 34) ஆகிய இரு வீராங்கனைகளும் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பார்க் (Tony Burke) மனிதநேய விசாக்களை வழங்கிய நிலையில், புதன்கிழமை பிரிஸ்பேனில் (Brisbane) நடைபெற்ற குடியுரிமை வழங்கும் விழாவில் இவர்கள் ஆஸ்திரேலியக் குடிமக்களாகச் சேர்க்கப்பட்டனர்.
குடியுரிமை சான்றிழைப் பெற்றுக் கொண்ட பாத்திமா பசந்தீதே தனது அறிக்கையில் தெரிவிக்கையில், “நேற்று என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. ஆஸ்திரேலியக் குடிமகளாக மாறியதில் நான் அளப்பரிய பெருமையும் நன்றியும் அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் கடந்து வந்த அனைத்துப் போராட்டங்களுக்கும், எதிர்கொண்ட சவால்களுக்கும் பிறகு, இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிக முக்கியமானது. இது வெறும் சான்றிதழ் மட்டுமல்ல; ஒரு புதிய தொடக்கம் மற்றும் நான் என் தாய்வீடு எனப் பெருமையுடன் அழைக்கும் ஒரு இடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், அதீபே ரம்சானிசாதே தனது குடியுரிமையைப் பெற்ற நாளை “மறக்க முடியாத நாள்” என்று விவரித்துள்ளார்.
“ஆஸ்திரேலியக் குடிமகளாக மாறியதில் நான் பெருமையும் ஆழ்ந்த நன்றியும் அடைகிறேன். எனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஆஸ்திரேலியா எனக்கு வாய்ப்பளித்துள்ளது. நான் இங்குச் சொந்தமாகச் சார்ந்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு முன்பை விட இப்போது அதிகமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “அதே நேரத்தில், எனது வேர்களும் ஈரான் பற்றிய நினைவுகளும் எப்போதும் என் அடையாளத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்” என்று கூறிய ரம்சானிசாதே, ஆஸ்திரேலியக் குடிமகளாகச் சமூகத்துக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.