காணொளி: “உங்களுக்கும் சிபிஐ, ஐடி வழக்குகள் இருக்கின்றன” – உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான உரையின் போது பேசிய தவெக உறுப்பினர் என்.எம். சுகுமார் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் தங்களது பதவிக் காலத்தில் எப்போதும் “டென்ஷனாக” இருந்ததாக கூறியதை குறிப்பிட்டு, “அவ்வாறு டென்ஷனாக இருக்க காரணம் எப்போது ரெய்டு வருமோ என்ற பயம்தான்” என கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெகவினர் மீதும் சிபிஐ வழக்கு, வருமான வரி வழக்கு எல்லாம் உள்ளன என கூறினார். அதற்கு அமைச்சர் ஆனந்த் எதிர்வினையாற்றினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு