பிரேமலதா விஜயகாந்த்
இந்த தீர்மானம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.
நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.
தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர், கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.
இலங்கைவாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.
நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதிச்சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.
FCRA பணம் புறவாசல் வழியாக வந்துவிடாமல் தவெக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தவறான வழியில் தமிழகத்தில் நுழையும் பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.