வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று (புதன்கிழமை) காணொளி வாயிலாக ஆற்றிய உரையில், தான் வங்கதேசத்திற்கு திரும்புவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் கூறினார்.
தனது இந்த திரும்புதல் அதிகாரத்தை கோருவதற்காக அல்ல என்றும், மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்,” என்று மேலும் கூறினார்.
காணொளிக் காட்சி மூலம் பேசிய அவர், மக்கள் “மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும்”, அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்ததாக ஊடகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.