• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்.பி. வேலுமணி அதிமுகவிலேயே இருந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் உத்தி என்ன?

Byadmin

Aug 11, 2026


எஸ்.பி. வேலுமணி

பட மூலாதாரம், SPVelumani/X

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் இணைந்து எழுதியுள்ள கடிதம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதுடன், கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அந்தப் பொறுப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளணர்.

அதோடு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், கமிட்டி அமைக்க வேண்டுமென்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலுமணி பேசியுள்ளார்.

வேலுமணியும், நத்தம் விஸ்வாநதனும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கட்சித்தலைமை தங்களை நீக்கினால் தவெகவில் இணையலாம் என்பதற்காகவே வேலுமணி இப்படிப் பேசுவதாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

அதிமுகவை உடைக்க வேலுமணி தரப்பு தயாராகிவிட்டதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.

By admin