• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா 171 விமான விபத்துக்கான காரணம் குறித்து எழும் சர்ச்சைகள்

Byadmin

Jun 12, 2026


 ஏர் இந்தியா விமானம் 171 விபத்து
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று, வெப்பமான மற்றும் வறண்ட மதிய வேளையில், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தின் முனையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 171 புறப்பட்டது.

    • எழுதியவர், தியோ லெகெட்
    • பதவி, சர்வதேச வணிகச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

ஒரு வருடத்துக்கு முன்பு, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது.

இதில் 260 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசாரணை, பரஸ்பர நலன்களுக்கு முரண்பாடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதன் நேர்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியதால், இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ஒரு விசாரணை விவாதத்துக்குரியதாக மாறியிருப்பது இது முதல் முறையல்ல.

எனவே, விமான விபத்துகளை விசாரிப்பதில் வேறுபட்ட அணுகுமுறையைக் கையாள வேண்டிய நேரம் இதுதானா?

By admin