• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

‘கடலின் ஆழத்தில் இருந்து மனதை ஆட்கொள்ளும் குரல்’ – திமிங்கலம் பாடும் என்பதை உலகம் அறிந்த தருணம்

Byadmin

Sep 20, 2026


திமிங்கலங்கள்

பட மூலாதாரம், Getty Images

1970-ஆம் ஆண்டு இது வரையிலான இயற்கை சார்ந்த இசை ஆல்பங்களில் அதிகம் விற்பனையான ஆல்பம் வெளியானது, திமிங்கலப் பாடலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதோடு நாம் திமிங்கலங்களை பார்க்கும் விதத்தை அது என்றென்றும் மாற்றியமைத்தது.

1952-ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க சோனார் பொறியாளர் ஃபிராங்க் வாட்லிங்டன் பெர்முடா கரை அருகே பணியில் இருந்தார். அங்கு சோவியத் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் நில அதிர்வு செயல்பாடுகளை கடலின் ஆழத்தில் கவனித்துக் கொண்டிருந்தார்.

வாட்லிங்டன் ஆரம்பகால வகையைச் சேர்ந்த நீருக்கடியில் ஒலி அறியும் கருவி ஒன்றைப் பயன்படுத்தி வந்தார். ஒரு முனையில் ஒலிவாங்கியுடன் நீண்ட கேபிள்கள் கொண்ட அந்தக் கருவியை கடலுக்குள் செலுத்தி ஆய்வு செய்து வந்தார். அவர் என்ன மாதிரியான ராணுவச் செயல்பாடுகளைக் கண்டறிந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வேறு ஒன்றை கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தார்.

துயரமான, மனதை நிலைகுலையச் செய்யும் அந்த ஒலிகள் சில சமயங்களில் மணிக்கணக்கில் நீடிக்கும். வாட்லிங்டன் பிரமித்துப் போனார். ஆனால் அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் அவை ஹம்பேக் திமிங்கலங்களால் எழுப்பப்படுகின்றன என்று அவர் நினைக்கத் தொடங்கினார்.

அவரின் கணிப்பு சரியாக இருந்தது. வாட்லிங்டன் மற்றும் மற்றும் சிலர் ஹம்பேக் திமிங்கலங்களின் தொடர்பு பற்றி ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட ஒலிப்பதிவுகள் நாம் திமிங்கலங்களைப் பார்க்கும் விதத்தை என்றென்றும் மாற்றியமைத்தது.

By admin