• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

கரிவலம்வந்தநல்லூர்: சதுர வடிவ கிணறு ‘கீழடியை போன்ற நகர நாகரீகத்தை’ உணர்த்துகிறதா?

Byadmin

Jul 9, 2026


கீழடி, கரிவலம்வந்தநல்லூர், நகர நாகரீகம்
படக்குறிப்பு, கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள பானைகள்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒரு பண்டைய நகர நாகரீகத்துக்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், கீழடி (11ஆம் கட்ட அகழாய்வு) உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதில் ஒன்று தான் கரிவலம்வந்தநல்லூர். இது கீழடியில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு மலையடிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள காரிச்சாத்தான் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், அகழாய்வு தொடங்கப்பட்ட 3 மாதங்களிலேயே செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கிணறு போன்ற ஒரு கட்டட அமைப்பு, கண்ணாடி மணிகள், இரும்பு தாதுக்கள், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. பானை ஓடுகள் மற்றும் ஈமத்தாழிகளில் பொறிப்புகளையும் காண முடிகிறது.

குறிப்பாக செங்கல் கட்டுமானம், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவை ‘ரிலேடிவ் டேட்டிங்’ (Relative dating) என்ற முறையில், கீழடி, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களுடன் ஒத்துப்போவதால், இவை கீழடி நகர நாகரீகத்தைச் சேர்ந்த, அதாவது கி.மு. 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு எனும் சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

கீழடி, கரிவலம்வந்தநல்லூர், நகர நாகரீகம்
படக்குறிப்பு, செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கிணறு போன்ற ஒரு கட்டட அமைப்பு

கரிவலம்வந்தநல்லூரின் முக்கியத்துவம்

1930களில் இந்த கரிவலம்வந்தநல்லூரில் 6 ரோமானிய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மாதிரிகள் தற்போது திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

By admin