• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் இனாம் நில விவகாரம்: தவெகவை இன்னொரு திமுக என பாஜக விமர்சிப்பது ஏன்?

Byadmin

Jul 14, 2026


கரூர் 3084 ஏக்கர் இனாம் நில விவகாரம், தவெக, திமுக, பாஜக

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவால் 15 கிராமங்களில் 471 சர்வே எண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலகிவிட்டதாகக் கூறும் விவசாயிகள், ’15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்கின்றனர்.

ஆனால், சட்டத்துக்கும் அறத்துக்கும் புறம்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது. என்ன பிரச்னை?

பின்னணி

கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் (புகழிமலை), கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ரவீஸ்வரர் கோவில் (குப்புச்சிபாளையம்), விக்ருதீஸ்வரர் கோவில் (வெஞ்சமாங்கூடலூர்) ஆகிய கோவில்கள் உள்ளன.

இந்த நான்கு கோவில்களுக்கு 15 கிராமங்களில் 471 சர்வே எண்களில் 3084 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறி கடந்த 2007 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் ‘Prohibitory Module’ (பத்திரப்பதிவு தடை) பிரிவில் சேர்க்கப்பட்டது.

By admin