• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் மீண்டும் பேரணி – காரணம் என்ன?

Byadmin

Aug 25, 2026


காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) மீண்டும் பேரணியில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ஆம் தேதி, இந்தியா கேட் முதல் டெல்லி போலீஸ் தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை நடத்தப்போவதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, சிஜேபி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூலை 25-ஆம் தேதி தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட சிஜேபியின் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதித்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின்போது, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல போராட்டக்காரர்களும் போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

By admin