• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

காண்டாமிருக வண்டு: தலையில் கொம்பு, கவசம் போன்ற உடல் – விவசாயிகள் அஞ்சுவது ஏன்?

Byadmin

Jul 8, 2026


காண்டாமிருக வண்டு: தலையில் கொம்புடன் இருக்கும் இந்த பூச்சிக்கு விவசாயிகள் அஞ்சுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நான் முதன்முதலில் காண்டாமிருக வண்டு ஒன்றைப் பார்த்தபோது, அது ஏதோ சிறிய கவசமணிந்த ஓர் உயிரினம் போலத் தோன்றியது. அந்தத் தருணம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூரில், சாலையோரமாக பூச்சிகளை அவதானிப்பதற்காக பூச்சி நடை மேற்கொண்டிருந்தபோது வந்தது.

அந்த இயற்கை சூழ் நிலப்பரப்பில், மனிதர்களைவிட, இறக்கைகள், உணர்கொம்புகள், நிழல்களுக்கே இரவு அதிகம் சொந்தமானது போலத் தோன்றியது. கைவிளக்குகளின் ஒளியில் சாலையோரம் உயிர்ப்புடன் நடுங்கிக் கொண்டிருந்த இலைகளில் அமர்ந்திருந்த அந்துப்பூச்சிகளை, புழுதியினூடாக ஒழுங்கான பாதைகளில் ஊர்ந்து சென்ற எறும்புகளை அவதானித்துக் கொண்டிருந்தோம்.

இருளில் எங்கோ, சிள்வண்டுகள் தங்கள் ரீங்காரத்தை இசைத்துக் கொண்டிருந்தன. ஒவ்வோர் அடியிலும், அந்த நிலப்பரப்பு ஏதோ ரகசியப் பெட்டகத்தைத் திறப்பது போல, ஒவ்வொரு தாவரத்திலும் பல வகை இரவாடி சிற்றுயிர்களின் நடமாட்டத்தைக் காண முடிந்தது.

அப்போதுதான் அதையும் பார்த்தேன். சாலையோரம் இருந்த ஆமணக்குச் செடியின் அகன்ற இலை ஒன்றின்மீது, பளபளப்பான வண்டு கனமாக நின்றிருந்தது. டார்ச் ஒளியில் அதன் வளைந்த உடல் கருங்கல்லைப் போல மெருகேறியிருந்தது. அதன் தலையில் இருந்த கொம்பு, பயமுறுத்தும் அளவுக்குப் பெரிதாக இல்லையென்றாலும், என்னை அசைவின்றி நின்று ஆராய வைக்கும் அளவுக்கு விசித்திரமாக இருந்தது.

அந்த வண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவசரமாக ஓடவில்லை. அது கிட்டத்தட்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஏதோவொரு பழமையான உயிரினம் போலத் தோன்றியது.

By admin