• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதட்டம்: ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

Byadmin

Jul 8, 2026


ஹார்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் இருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தெஹ்ரான் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கெஷ்ம் தீவு (Qeshm island), பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் சிரிக் (Sirik) ஆகிய பகுதிகள் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்றும், அங்கு சிதறிய குண்டுகளின் துகள்கள் (Shrapnel) பட்டு மக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான, மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் இதுவரை நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்க மத்திய கட்டளைகம், ஈரானின் 60 சிறிய படகுகள் தவிர, ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் தாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், அந்த இலக்குகள் எங்கு அமைந்துள்ளன என்ற விவரங்களை அது வெளியிடவில்லை.

மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத” இந்தத் தாக்குதல்களுக்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என்று அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

By admin