ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.