• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

‘காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல்’ விடுத்ததாகக் கூறிய நபர் மறுநாளே கொல்லப்பட்டதன் பின்னணி

Byadmin

Sep 11, 2026


பிரதீப் ராஜ்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரதீப் ராஜ்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“கடந்த 8ஆம் தேதி காவல் ஆய்வாளர் என்னை அழைத்தார். ‘இருவரும் மாறி மாறி வெட்டிக் கொல்லவிருப்பதாகத் தகவல் வந்தது’ என்றார். ‘அதற்கு ஆதாரம் உள்ளதா?’ எனக் கேட்டேன். என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்”

திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளித்த பிரதீப் ராஜ், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். கடன் பிரச்னை காரணமாகத் தனது மகன் கொல்லப்பட்டதாகக் கூறும் இறந்துபோன நபரின் தாய், “கொலையின் பின்னணியில் காவல்துறை உள்ளது” என்கிறார்.

ஆனால், “காவல் ஆய்வாளர் மீது எந்தத் தவறும் இல்லை” என்கிறார், திருவொற்றியூர் சரக காவல் உதவி ஆணையர் பால்ராஜ்.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 29 வயதான பிரதீப் ராஜ், திரைப்படங்களில் துணை நடிகராகப் பணியாற்றி வந்துள்ளார். திரைப்பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதியன்று, திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், தனது தெருவில் வசிக்கும் சிலருடன் உள்ள முன்பகை குறித்து சில தகவல்களைக் கூறியுள்ளார்.

By admin