தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, த.வெ.க., நாதக ஆகிய 4 முனை போட்டி நிலவியது. ஆனால், த.வெ.க. தலைவர் விஜய் இந்த தேர்தலில் தவெக- திமுக இடையில் மட்டும்தான் போட்டி என்றார்.
அவர் பேசிய பரப்புரைகளில் திமுக-வை கடுமையாக சாடினார். அதேவோல் விஜயை மாற்று கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் முடிவில் விஜயின் த.வெ.க. 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பின்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிளின் ஆதரவுடன் ஆளுநரிடம் விஜய் மெஜாரிட்டியை காண்பித்தார். இதனால் நேற்று முன்தினம் விஜய் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக அதிக இடங்களுடன் எதிர்வரிசையில் அமர இருக்கின்றன. தேர்தலில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.